Published : 19 Feb 2018 03:08 PM
Last Updated : 19 Feb 2018 03:08 PM

முதல் டி20 வெற்றியை ஹோட்டலில் விருந்துடன் கொண்டாடிய இந்திய அணி

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியை கோலி தலைமையில் வீரர்கள் ஹோட்டலில் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து, இந்திய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்று கைப்பற்றிய நிலையில், ஒரு நாள் தொடரை 5-1 என்று இந்திய வென்று புதிய வரலாறு படைத்தது. இதைத் தொடர்ந்து டி20 தொடர் நடந்து வருகிறது.

ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று இந்தியஅணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்க மண்ணில், டி20 போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்ததும் இதுமுதல் முறையாகும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் டி20 போட்டிகளில் தனது 4-வது அரை சதம் அடித்தார், பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தனது முதலாவது 5 விக்கெட்டு சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த கேப்டன் விராட் கோலி, வீரர்கள் அனைவருக்கும் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு விருந்து சாப்பிட்டனர்.

இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்க கேப்டன் கோலி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் புகைப்படத்தை பகிர்ந்து, 'டி20 வெற்றியைத் தொடர்ந்து அணி வீரர்கள் அனைவரும் நேற்று இரவு ஹோட்டலில் விருந்து சாப்பிட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதே புகைப்படத்தை சுரேஷ் ரெய்னாவும், ஷிகர் தவானும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 'வெற்றியைக் கொண்டாட இதுதான் சிறந்த வழி, என்னுடைய அணி வீரர்களுடன் டின்னர் சாப்பிடுகிறேன்'  என்று சுரேஷ் ரெய்னாவும், 'சிறப்பான போட்டிக்குப் பின், எனது அணி வீரர்களுடன் டின்னர் சாப்பிடுகிறேன்' என்று ஷிகர் தவானும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x