Published : 10 Jan 2024 06:53 AM
Last Updated : 10 Jan 2024 06:53 AM

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார். ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 12-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தனது 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட்டில் 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் யீ மானிடம் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்செஸ்கா குரோபெட், அலிசன் லீ ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x