Published : 19 Jan 2018 12:24 PM
Last Updated : 19 Jan 2018 12:24 PM

அஸ்வினை நிச்சயம் ஏலத்தில் எடுப்போம்: தோனி

அஸ்வினை  எலத்தில்  நிச்சயம் எடுப்போம் என்று சென்னை கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள மகேந்திர சிங் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யபட்டிருந்தன, இந்த அணிகள் தற்போது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழக வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபிமான வீரரும் ஆன அஸ்வினை ஏலத்தில் எடுக்காமல் இருந்ததற்காக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய தோனி,“வலிமையான அணியை தேர்வு செய்வதே எங்கள் நோக்கம். அஷ்வினை நிச்சயம் எலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் உள்ளூர் வீரர்கள் இடப்பெறுவது அவசியம். பிராவோ, டுபிளெசிஸ், மெகல்லம் ஆகியோரையும் கருத்தில் கொள்வோம்“ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x