Published : 25 Jan 2018 06:44 PM
Last Updated : 25 Jan 2018 06:44 PM
இந்தோனேசியாவில் நடந்து வரும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் மோதுகின்றனர்.
ஜகார்தாவில் 3.5லட்சம் டாலர் பரிசு தொகை கொண்ட இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்கொண்டார் தரவரிசையில் 20ம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் ஜியாஜின்.
ஒரு தரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சென் ஜியாஜின்னை 21-12, 21-18 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால். இந்த ஆட்டம் 37 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
மற்றொரு மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசிய வீராங்கனை கோ ஜின் வீ யை 21-12, 21-9 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
இந்திய வீராங்கனைகள் இருவரும் காலிறுதியில் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். சர்வதேச அளவில் இரு வீராங்கனைகளும் இருமுறை மோதி, தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு நடந்த, தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்துவை சாய்த்தார் சாய்னா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT