Published : 08 Jan 2018 10:12 AM
Last Updated : 08 Jan 2018 10:12 AM

ஏடிபி டென்னிஸ் சைமன் சாம்பியன்

மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்லஸ் சைமன் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்றினார்.

சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஏடிபி டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு முதல் மகாராஷ்டிர மாநிலம் புனே வில் நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதியாட்டத்தில் முன்னணி வீரரான கில்லஸ் சைமன் 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் - கில்லஸ் சைமன் ஜோடி, நெதர்லாந்தின் ரோபின் ஹாஸ் - மாட்வே மிடெல்கூப் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் நெதர்லாந்து ஜோடி பட்டத்தை கைப்பற்றியது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x