உலக கேடட் செஸ்: இந்திய அணி விலகல்

உலக கேடட் செஸ்: இந்திய அணி விலகல்
Updated on
1 min read

புதுடெல்லி: உலக கேடட் செஸ் போட்டியில் இருந்து இந்திய அணி விலகிக் கொண்டுள்ளது.

எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அக்டோபர் 14-ம்தேதி (இன்று) முதல் 23-ம் தேதிவரை உலக கேடட் செஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய அணி அறிவித்துள்ளது.

வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக இந்தியஅணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in