Published : 16 Dec 2017 10:39 AM
Last Updated : 16 Dec 2017 10:39 AM
துபை சூப்பர் சீரிஸ் பைனல் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள துபை சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் சீனாவின் பிங்க்ஜியோவையும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானின் சயகா சடோவையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் சிந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT