Published : 24 Dec 2017 10:59 AM
Last Updated : 24 Dec 2017 10:59 AM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொது மேலாளராக (கிரிக்கெட் செயல்பாடு) இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஜனவரி 1-ம் தேதி இந்த புதிய பொறுப்பை சபா கரீம் ஏற்கவுள்ளார். பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் கீழ் சபா கரீம் செயல்படுவார். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்களைச் செயலாற்ற ஜோரிக்கு உதவியாக கரீம் இருப்பார் . பிசிசிஐ பொது மேலாளர் பதவி கடந்த செப்டம்பர் முதல் காலியாக இருந்தது. பொது மேலாளராக இருந்த ஸ்ரீதர் கடந்த அக்டோபரில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்தே கரீமுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT