Published : 05 Dec 2017 02:41 PM
Last Updated : 05 Dec 2017 02:41 PM
டெல்லி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது உடல் நலக்குறைவால் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் லகிரு கமகே மைதானத்திலிருந்து வெளியேறினார்.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருக்கும்போது, 6-வது ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லகிரு கமகே மைதானத்திலேயே வாந்தி எடுத்தார்.
இதனையடுத்து இலங்கைப் பயிற்சியாளர் வந்து லகிரு கமகேவை அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11-வது ஓவரில் லகிரு கமகே மீண்டும் ஆட்டத்தில் இணைந்து கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் டெல்லியில் நிலவிய மாசு காரணமாக பெரோஷா கோட்லா மைதானத்தில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் 3 முறை தடைபட்டது. இலங்கை அணி வீரர்கள் மூகமுடி அணிந்து கொண்டு விளையாடினர்.
அப்போது உடல் நலக்குறைவால் லகிரு கமகே மைதானத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT