Published : 05 Dec 2017 02:41 PM
Last Updated : 05 Dec 2017 02:41 PM

டெல்லி மாசு: உடல் நலக்குறைவால் மைதானத்திலிருந்து வெளியேறிய லகிரு கமகே

டெல்லி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது உடல் நலக்குறைவால் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் லகிரு கமகே மைதானத்திலிருந்து வெளியேறினார். 

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருக்கும்போது, 6-வது ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லகிரு கமகே மைதானத்திலேயே வாந்தி எடுத்தார்.

இதனையடுத்து இலங்கைப் பயிற்சியாளர் வந்து லகிரு கமகேவை  அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11-வது ஓவரில் லகிரு கமகே மீண்டும் ஆட்டத்தில் இணைந்து கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் டெல்லியில் நிலவிய மாசு காரணமாக  பெரோஷா கோட்லா மைதானத்தில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் 3 முறை தடைபட்டது. இலங்கை அணி வீரர்கள் மூகமுடி அணிந்து கொண்டு விளையாடினர்.

அப்போது உடல் நலக்குறைவால் லகிரு கமகே மைதானத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x