Last Updated : 09 Dec, 2017 04:40 PM

 

Published : 09 Dec 2017 04:40 PM
Last Updated : 09 Dec 2017 04:40 PM

இலங்கையை 3-0 என்று வீழ்த்தினால் தெ.ஆ. அணியைக் கடந்து முதலிடம் பெற இந்திய அணிக்கு வாய்ப்பு

தரம்சலாவில் நாளை (ஞாயிறு) தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்று தொடரை வென்றால் ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெறும்.

டெஸ்ட் போட்டித் தர நிலையில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் ஒரு புள்ளி மட்டுமே குறைவாகப் பெற்று 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நாளை தரம்சலாவில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றா 121 புள்ளிகளுடன் தசம இடைவெளியில் தென் ஆப்பிரிக்காவைக் கடந்து விடும் இந்திய அணி. ஆனால் மொஹாலி (டிச.13,) மற்றும் விசாகப்பட்டனம் (டிச.17) ஆகிய போட்டிகளிலும் இந்திய அணி வென்று 3-0 என்று கைப்பற்றினால் தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் போட்டி தரவரிசையில் பின்னுக்குத் தள்ள் இந்திய அணி முதலிடம் பிடிக்கும்.

இலங்கை அணி தற்போது 83 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது. மாறாக இந்திய அணி 2-1 என்று வெற்றி பெற்றால் கூட இந்திய அணியின் புள்ளிகள் 119ஆகக் குறையும். இலங்கை இந்திய அணியை 3-0 என்று வீழ்த்தும் பட்சத்தில் 87 புள்ளிகளைப் பெறும். ஆனால் தரவரிசை நிலையில் மாற்றம் ஏற்படாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x