Published : 29 Dec 2017 10:30 AM
Last Updated : 29 Dec 2017 10:30 AM

இறுதிப் போட்டிக்கு ஆல்பா குரூப்,ஸ்ரீரங்கம் மேல்நிலைப்பள்ளி முன்னேற்றம்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரில் திருச்சியில் நடைபெற்ற ஆட்டங்களில் ஆல்பா, ஸ்ரீரங்கம் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 72 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் காம்பியன் ஏ.ஐ.எச்.எஸ் - ஆல்பா குரூப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆல்பா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

சாவிந்த் 52, பிரகாஷ் 29 ரன்கள் சேர்த்தனர். 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த காம்பியன் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது. 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆல்பா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 56 ரன்கள் வித்தியாசத்தில் கமலா நிகேதன் அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் ஆல்பா - ஸ்ரீரங்கம் அணிகள் மோதுகின்றன.

சேலத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் நீலாம்பாள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வித்யா மந்திர் பிளான்ட் அணியையும், வித்யா மந்திர் எஸ்எஸ்எஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் எமரால்டு வாலி அணியையும் வீழ்த்தின.

திருநெல்வேலியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் சங்கர் மேல்நிலைப் பள்ளி அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ ஜெயேந்திரா அணி வீழ்த்தியது. கோவையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டங்களில் ஸ்ரீ ஜெயேந்திரா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்கேஎஸ் கல்விநிலையம் அணியையும், மணி மேல்நிலைப்பள்ளி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா அணியையும் வீழ்த்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x