Published : 06 Dec 2017 07:35 PM
Last Updated : 06 Dec 2017 07:35 PM

4-ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு வெற்றி பெறாமல் போனது ஏமாற்றமே: விராட் கோலி

டெல்லி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் 5-ம் நாள் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமே என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:

4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கையின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகே 5-ம் நாள் வெற்றியுடன் முடிக்க முடியாதது ஏமாற்றமே. ஆனால் இலங்கை வீரர்கள் நன்றாக ஆடினர், தன்னம்பிக்கையும், கட்டுக்கோப்பும் அவர்கள் ஆட்டத்தில் தெரிந்தது. பிட்சும் கடைசியில் சோர்ந்து விட்டது.

அவர்கள் ஆட்டத்தை நாங்கள் வெற்றிக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. முதல் இன்னிங்ஸில் கேட்ச்களை பிடித்திருந்தால் அவர்கள் அதிக ரன்களை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஸ்லிப் கேட்ச், பீல்டிங்கில் இன்னும் கொஞ்சம் கடின உழைப்புத் தேவைப்படுகிறது.

அஜிங்கிய ரஹானே ஆரம்பத்திலிருந்தே கல்லியில் பீல்ட் செய்து வந்தார். அது கடினமான இடம் இதனால் அவரை அங்கு நம்பியிருந்தோம். முதலாம், இரண்டாம் ஸ்லிப்புகளில் பயிற்சிகள் மேற்கொண்டால் அங்கும் சிறபாக விளங்கலாம். ஆனால் கல்லியில் அப்படி கிடையாது. எனவே ஸ்லிப் கேட்சிங் என்ற ஒரு புலத்தில் இன்னமும் பயிற்சி, உழைப்பு தேவைப்படுவதாக உணர்கிறோம்.

பணிச்சுமை பயங்கரமாக உள்ளது, என் உடல் ஓய்வு கேட்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உடல் கொஞ்சம் அதிக வேலை செய்து விட்டது. எனவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக ஓய்வு என்பது சரியானதாக அமைந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவது போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் என்னால் ஆட முடிகிறது என்பது எனக்கே புதிய வெளிப்பாடாகும். குறிப்பிட்ட, அமைக்கப்பட்ட முறையில் ஆடுவது என்பதல்ல, தன்னம்பிக்கை இருந்தால் எந்த ஒரு வடிவத்திலும் சாதிக்கலாம். நான் கேப்டனாக இல்லாத போது சூழ்நிலைகள் பற்றி சிந்திப்பது கடினம். டெஸ்ட் கிரிக்கெட் ஆட வரும் போது எனக்கு கடும் அழுத்தம் இருந்தது. அப்போது மைல்கல்லை எட்டினால் நான் ரிலாக்ஸ் ஆவேன். இப்போது இவை முற்றிலும் மாறிவிட்டது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x