Last Updated : 06 Dec, 2017 08:11 PM

 

Published : 06 Dec 2017 08:11 PM
Last Updated : 06 Dec 2017 08:11 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி திரும்ப முடியும்

ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2015-ல் அவர்கள் அணியில் ஆடிய வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளதையடுத்து தோனி மீண்டும் அவருக்குப் பிடித்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் வாய்ப்பு வலுவாகியுள்ளது.

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யபட்டிருந்தன, இந்த அணிகள் தற்போது 2 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில் 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடமுடியும்.

இந்நிலையில் இன்று கூடிய ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இரு அணிகளும் 2015-ம் ஆண்டு தங்கள் அணியில் இருந்த வீரர்கள் சிலரை தக்கவைக்க அனுமதி வழங்கியுள்ளது.

தோனி கடந்த 2 ஆண்டுகளாக ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆடிவந்தார்.

ஐபிஎல் அணிகள் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவாகியுள்ளது. எனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், குஜராத் லயன்ஸ் அணிக்கும் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களைத் தக்க வைக்க முடியும்.

இதனையடுத்து ‘தல’ தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மஞ்சள் சீருடையில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x