Last Updated : 16 Dec, 2017 07:40 PM

 

Published : 16 Dec 2017 07:40 PM
Last Updated : 16 Dec 2017 07:40 PM

ஏதோ ஒரு கட்டத்தில் கோலி, அனுஷ்கா ஊடகங்களை எதிர்கொண்டாக வேண்டும்: சானியா மிர்சா

7 ஆண்டுகளுக்கு முன்பாக சானியா மிர்சா-ஷோயப் மாலிக் திருமணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களை ஆக்ரமித்தன, இன்று விராட் கோலி, அனுஷ்கா சர்மா திருமண விஷயம் ஊடக விவகாரமாகி விட்டது.

இதனை புரிந்து கொள்வதாகக் கூறிய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, ஒரு கட்டத்தில் ஊடகத்தை விராட் கோலி, அனுஷ்கா சர்மா சந்தித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கொல்கத்தாவில் கூறியதாவது:

அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்ல முடியுமா என்று தெரியவில்லை, நான் டிசம்பர் 21-ம் தேதி துபாயில் இருப்பேன். ஊடக ஊதிப்பெருக்கம் எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. விராட் கோலி, அனுஷ்கா நீண்டநாட்களாக பழகி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இருவரும் திருமணம் செய்து கொண்டது நல்லதே. தங்களைச் சுற்றி ஊடகங்கள் மொய்ப்பதை இருவருமே அறிவர். அதனால்தான் இத்தாலிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டனர் .

ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஊடகஙளை இருவரும் சந்தித்துத்தான் ஆகவேண்டும், பிரபலங்களின் திருமணங்கள் எப்போதும் சிக்கல் நிறைந்ததே. திருமண நிகழ்வுகள் நிறைய அழுத்தங்களைத் தருகிறது.

என் சகோதரிக்குத் திருமணம் நடந்தது, இது பிரபலங்களின் திருமணமல்ல இருந்தாலும் கொஞ்சம் அழுத்தம் இருக்கவே செய்தது.

இவ்வாறு கூறினார் சானியா மிர்சா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x