Last Updated : 29 Dec, 2017 08:29 PM

 

Published : 29 Dec 2017 08:29 PM
Last Updated : 29 Dec 2017 08:29 PM

தென் ஆப்பிரிக்கா தொடர் கோலியின் பேட்டிங், கேப்டன்சி திறமைகளுக்கு ஒரு சோதனை: பிஷன்சிங் பேடி

புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ்டார் இதழ் மறு அறிமுக டெல்லியில் நடைபெற்றது, அதில் பிஷன்சிங் பேடி தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து தன் கருத்தைத் தெரிவித்தார்.

விராட் கோலி இன்னும் கடினமான சவால்களை சந்திக்கவில்லை, இந்த தென் ஆப்பிரிக்க தொடர் அவரது கேப்டன்சி, பேட்டிங் திறமைகளுக்குக் கடும் சவாலாக அமையும் என்றார் பிஷன் பேடி.

“பி.வி.சிந்து வளர்ச்சியடைந்து பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நான் கூறுகிறேன் விராட் கோலி தடுமாறுவார் என்று. உலகின் சிறந்த வீராங்கனைகளுடன் சிந்து மோதியுள்ளார், ஆனால் விராட் கோலி தற்போது தென் ஆப்பிரிக்கா என்ற உலகின் சிறந்த அணியுடன் போட்டியில் இறங்குகிறார். தென் ஆப்பிரிக்கா தொடர் விராட் கோலிக்கு ஒரு அக்னிப்பரிட்சை” என்றார்.

ஒரு காலத்தில் ஸ்போர்ட்ஸ்டார் இதழைப் படிக்காமல் விளையாட்டு ஆர்வலர்கள் காலம் தள்ள முடியாது, இன்று மீண்டும் ஒரு இதழாக புதிய வடிவில் மறு-அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மாதம் இருமுறை வரும் இதழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அறிமுகம் செய்தவர் மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங் ராத்தோர். இவருடன் பேடி, ஹாக்கி கிரேட் சஃபர் இக்பால், தேசிய பேட்மிண்டன் கோச் கோபிசந்த், மற்றும் பிவி சிந்து ஆகியோரும் அறிமுகம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட தி இந்து குழும, இணை-தலைவர் மாலினி பார்த்தசாரதி கூறும்போது, “அரசியல், சமூக ஊடகவியலை விட விளையாட்டு ஊடகவியல் தனித்துவமான இடத்தில் உள்ளது. விளையாட்டு ஊடகவியலில் வில்லன்கள் குறைவு ஆனால் நாயகர்கள் அதிகம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x