Published : 30 Nov 2017 10:45 AM
Last Updated : 30 Nov 2017 10:45 AM
கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கிரிக்கெட் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று சந்திக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்களுக்கு வருடாந்திர சம்பள ஒப்பந்தம் இந்த ஆண்டு ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐயுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியது. கிரிக்கெட் வாரியத்தின் லாபம் அதிகரித்துள்ளதால் இந்திய வீரர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நடக்கவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலியுடன் இதுபற்றி தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் கிரிக்கெட் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து கிரிக்கெட் ஆடுவது குறித்த இந்திய வீரர்களின் கவலை பற்றியும் இந்த கூட்டத்தில் கோலி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT