Published : 04 Dec 2017 10:35 AM
Last Updated : 04 Dec 2017 10:35 AM

டெல்லியில் காற்று மாசு: முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்; 3 முறை தடைபட்ட ஆட்டம்

இந்தியா - இலங்கை இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் காற்று மாசு காரணமாக இலங்கை அணி வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று காற்று மாசுபாடு காரணமாக 3 முறை தடைப்பட்டது.

நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியபோது இலங்கை வீரர்களில் 5 பேர் முகமூடி அணிந்து பீல்டிங்கை மேற்கொண்டனர்.

காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக இலங்கை வீரர்  லகிரு கமகே குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து மற்ற வீரர்களும் இதே காரணத்தைக் கூறினர்.

இதனால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி அவுட் ஆனார். இதன் பிறகும் 2 முறை காற்று மாசை காரணமாக கூறி இலங்கை வீரர்கள் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினர்.

ஒரு கட்டத்தில் கமகே, லக்மல் ஆகியோர் மைதானத்தில் இருந்து வெளியேற, இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் லீ, பீல்டிங் செய்ய முன்வந்தார். இவ்வாறாக ஆட்டம் சுமார் 26 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். 140 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் காற்று மாசு காரணமாக, ஒரு போட்டி இடையில் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வங்க தேசம், குஜராஜ் மற்றும் ஹைதராபாத், திரிபுரா இடையே நடந்த இரண்டு ரஞ்சி போட்டிகள் காற்று மாசுக்காரணமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x