Last Updated : 30 Nov, 2017 12:50 PM

 

Published : 30 Nov 2017 12:50 PM
Last Updated : 30 Nov 2017 12:50 PM

டெல்லி சந்தையில் தீ விபத்து: உயிரிழப்பு இல்லை

டெல்லி சந்தையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 6-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் எரிந்து சாம்பலாகின.

தெற்கு டெல்லியில் உள்ளது மாளவியா நகர் சந்தை. அதன் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ரக தற்காலிக உணவகங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

இரவு நேரம் என்பதால், கடைகள் மூடப்பட்டிருந்தன. உள்ளே யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை. உள்ளூர் மக்கள் விபத்து குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x