Published : 24 Nov 2017 01:38 PM
Last Updated : 24 Nov 2017 01:38 PM

நாளை முதல் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவ மழைக்கான நிலைமைகள்  வலு பெற்றுள்ளதால் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில்கூறும்போது, “இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை குறைந்த அளவிலேயே பெய்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக வலு குறைந்திருந்த பருவ மழை தற்போது வலு பெற்றுள்ளது.

இதன் காரணமாக நாளைமுதல் மூன்று நாளைக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x