

வடமாநில மீனவர்கள் பாதித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய- இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா என அவர் கேள்வி எழுயுள்ளார்.
பாஜக ஆட்சியில் இந்திய கடலோர காவல்படையே மீனவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள திருமாவளவன், வட இந்தியர்கள் பாதித்தால் நடவடிக்கை எடுக்கும் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.