Published : 25 Nov 2017 10:20 AM
Last Updated : 25 Nov 2017 10:20 AM

அரை இறுதியில் பி.வி.சிந்து

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். சுமார் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். சிந்து அரை இறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் இன்டனான் ராட்சனோக்கை எதிர்கொள்கிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 10-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யுபியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x