Published : 10 Jul 2023 09:55 AM
Last Updated : 10 Jul 2023 09:55 AM

விம்பிள்டன் டென்னிஸ் | கால் இறுதியில் ஜெசிகா பெகுலா

ஜெசிகா பெகுலா

லண்டன்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 60-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் லெசியா சுரென்கோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜெசிகா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

42-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவிடம் 2-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x