தேசிய சீனியர் மகளிர் கால்பந்து | தமிழக அணி சாம்பியன்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக அணியினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக அணியினர்.
Updated on
1 min read

சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

50-வது நிமிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை துர்கா ‘சுய கோல்’ அடித்தார். இதனால் ஹரியாணா 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த 7-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. தொடர்ந்து 83-வது நிமிடத்தில் இந்துமதி கார்த்தீசன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தமிழ்நாடு அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

கடைசியாக 2017-18-ம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in