பாக்., இலங்கையில் ஆக.31-ல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்

பாக்., இலங்கையில் ஆக.31-ல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்
Updated on
1 min read

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரை பொறுத்தவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நோபாளம் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் லீக் போட்டிகள் முடிவில் 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இலங்கையிலும் போட்டிகள் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in