Published : 28 Oct 2017 10:19 AM
Last Updated : 28 Oct 2017 10:19 AM

நீச்சலில் சென்னை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியான ஹர்ஷிதா (10), கடந்த செப்டம்பர் 16-ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் 50 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் ஹரியாணாவில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற ஹர்ஷிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹர்ஷிதாவின் பெற்றோர் சுகுமார்- சரண்யா ஆவர். மதுரவாயல் ஷாம் அகடாமி பள்ளியில் ஹர்ஷிதா பயின்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x