Published : 06 Jun 2023 01:28 PM
Last Updated : 06 Jun 2023 01:28 PM

ஐபிஎல் 2023 | கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்ற சிஎஸ்கே அணி நிர்வாகம்

சென்னை: ஐபில் 2023 -ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர்கள் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தது.

இந்த நிலையில் கோப்பையை சிஎஸ்கே அணி நிர்வாகம் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றது. இதுகுறித்து தமிழக முதல்வர் ட்விட்டர் பக்கத்தில், “ IPL - 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x