Published : 24 Oct 2017 10:24 AM
Last Updated : 24 Oct 2017 10:24 AM
பல்கேரியாவின் சோபியா நகரில் பெண்களுக்கான 3-வது சர்வதேச பால்கன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் நேற்று முன்தினம் 81 கிலோ எடைப் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் லால் பக்மாவி ரால்டே 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் ஐரினாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் விலோ பசுமாட்டரி, ஹங்கேரியைச் சேர்ந்த ஹெலனோவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 54 கிலோ எடைப் பிரிவில் எம்.கே.தேவி மைசனம், 64 கிலோ எடைப் பிரிவில் ஜோதி, நிர்மலா ராவத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்றிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT