வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி பேராலய ஆண்​டுப் பெரு​விழா நாளை (ஆக.29) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி செப்​.7-ம் தேதி நடை​பெற உள்​ளது.

கீழ்​திசை நாடு​களின் லூர்து நகரம் என அழைக்​கப்​படும் பிரசித்தி பெற்ற வேளாங்​கண்ணி ஆரோக்​கிய அன்னை பேராலயத்​தில் ஒவ்​வொரு ஆண்​டும் ஆக.29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் ஆண்​டுப் பெரு​விழா தொடங்கி தொடர்ந்து 10 நாட்​கள் நடை​பெறும். இந்த 10 நாட்​களி​லும் நாள்​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வேளாங்​கண்​ணிக்கு வந்து அன்​னையை வணங்​கிச் செல்​வார்​கள்.

அந்த வகை​யில் இந்​தாண்டு ஆண்​டுப் பெரு​விழா, நாளை (ஆக.29) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. இதை முன்​னிட்​டு, நாளை மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின்​னர், கொடி ஊர்​வலம் புறப்​படும்.

பின்​னர் கொடிக்​கம்​பத்​தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை ஏற்றி வைக்​கிறார். தொடர்ந்து திருத்தல கலை​யரங்​கில் மாதா மன்​றாட்​டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்​பலி நிறைவேற்​று​தல் ஆகியவை நடை​பெறும்.

மறு​நாள் 30-ம் தேதி முதல் செப்​.7-ம் தேதி வரை பேரால​யம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம், மேல்​கோ​யில், கீழ்​கோ​யில் ஆகிய இடங்​களில் தமிழ், மராத்​தி, ஆங்​கிலம், கொங்​க​னி, கன்​னடம், தெலுங்​கு, இந்​தி, கிழக்​கத்​திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்​பலிகள் நடை​பெற உள்​ளன. செப்​.1-ம் தேதி சிலு​வைப் பாதை ஊர்​வலம் நடை​பெறும்.

விழா​வின் மிக முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி செப்​.7-ம் தேதி நடை​பெற உள்​ளது. செப்​.8-ம் தேதி விண்​மீன் ஆலயத்​தில் அன்​னை​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, அன்று காலை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு கூட்​டுப்​பாடல் திருப்​பலி நிறைவேற்​றப்​படு​கிறது. பின்​னர் கொடி​யிறக்​கம் செய்​யப்​பட்டு விழா நிறைவு பெறுகிறது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
அடுத்த பிரதமர் யார்? - 3-வது இடத்தில் விஜய்: கருத்துக்கணிப்பில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in