பழநி, திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம்

பழநியில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. (உள்படம்) தேரில் எழுந்​தருளிய வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி. படங்கள்: நா.தங்​கரத்​தினம்

பழநியில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. (உள்படம்) தேரில் எழுந்​தருளிய வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி. படங்கள்: நா.தங்​கரத்​தினம்

Updated on
1 min read

பழநி: ​திருச்​செந்​தூர், பழநி உள்​ளிட்ட முரு​க​னின் அறு​படை வீடிகளி​லும் நேற்று வைகாசி விசாகத் திரு​விழா கோல​கல​மாக நடை​பெற்​றது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமிகோயி​லின் உப கோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வைகாசி விசாகத் திரு​விழா மே 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. வைகாசி விசாகத் திரு​விழா தேரோட்​டம் நேற்று மாலை கோலாகல​மாக நடை​பெற்​றது. சுவாமி தேரில் எழுந்​தருளியதைத் தொடர்ந்து சுவாமி, அம்​பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்​றும் ஆரா​தானை​கள் நடை​பெற்​றன.

தொடர்ந்​து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்​றும் வீர​பாகு சுவாமி தேர்​கள் முன் செல்ல, வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மாரசு​வாமி தேரை, ‘கந்​தனுக்கு அரோக​ரா, முரு​க​னுக்கு அரோக​ரா’ என்ற கோஷம் முழங்க திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். ஜூன் 2-ம் தேதி காலை திரு​வூடல் நிகழ்ச்சி நடை​பெறும். அன்று இரவு கொடி​யிறக்​குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதே​போல் திருச்​செந்​தூரில் வைகாசி விசாக பெருந்​திரு​விழாவை முன்​னிட்டு நேற்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். அதி​காலை 1 மணிக்கு கோயில் நடை​திறக்​கப்​பட்​டு, 1.30 மணிக்கு விஸ்​வரூப தீபா​ராதனை நடந்​தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு உதய​மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்​சி​கால அபிஷேகம் நடந்​தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபா​ராதனை நடந்​ததும், சுவாமி ஜெயந்​தி​நாதர் தங்க சப்​பரத்​தில் எழுந்​தருளி வசந்த மண்​டபம் வந்து சேர்ந்​தார். அங்கு முனிகு​மாரர்​களின் மகன்​களுக்கு சாப​விமோச்​சனம் அளிக்​கும் நிகழ்ச்சி நடந்​தது.

அதி​காலை 1 மணி முதலே பக்​தர்​கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். மேலும், தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் பாத​யாத்​திரை​யாக ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். மேலும் அங்​கப்​பிரதட்​சணம் செய்​தும், அலகு குத்​தி​யும், காவடி, பால் குடம் எடுத்​தும் பக்​தர்​கள் வேண்​டு​தலை நிறைவேற்​றினர். கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​பட்​ட​தால் பக்​தர்​கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்​தனர்.

மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அபிஷேக் குப்தா தலை​மை​யில் 2 ஏடிஎஸ்​பி-க்​கள், 5 டிஎஸ்​பி-க்​கள் என சுமார் 1,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

<div class="paragraphs"><p>பழநியில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. (உள்படம்) தேரில் எழுந்​தருளிய வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி. படங்கள்: நா.தங்​கரத்​தினம்</p></div>
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in