திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேரக் கட்டுப்பாடு

நேரக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை.

நேரக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை.

Updated on
1 min read

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பக்​தர்​கள் தரிசனத்​துக்கு திடீரென நேர கட்​டுப்​பாடு விதித்து அறி​விப்பு பலகை வைக்​கப்​பட்​ட​தால் பக்​தர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் தரிசனம் என மூன்று வரிசைகளில் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கோயில் வளா கத்​தில் வைக்​கப்​பட்​டுள்ள அறி​விப்பு பலகை யில், ‘கட்டண தரிசன வழியில் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசை​யில் இரவு 7 மணி வரைக்​கும் மட்​டுமே பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் கோயி​லில் பொதுவாக சாதாரண நாட்​களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, இடைவேளை​யின்றி பக்​தர்​கள் தரிசனம் செய்து வரும் நிலை​யில், திடீரென வைக்​கப்​பட்​டுள்ள இந்த அறி​விப்பு பலகை பக்​தர்​களிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கோயில் நிர்​வாகம் விளக்​கம்: இதுதொடர்​பாக, கோயில் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கட்டண தரிசனத்​துக்கு மாலை 6.30 மணி வரை​தான் பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர். பொது தரிசனத்​துக்கு இரவு 7 மணி வரை​தான் அனு​ம​திக்​கப்​படு​வர். ஆனால், இதை சிலர் தவறாக புரிந்​து​கொண்​டு, ‘இனி மாலைக்கு பிறகு தரிசனம் கிடை​யாது’ என தவறான செய்​தி பரவுகிறது. தரிசன நேரம்​ குறைக்​கப்​பட​வில்​லை.

<div class="paragraphs"><p>நேரக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை.</p></div>
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in