சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் (கோப்புப் படம்).
சபரிமலை ஐயப்பன் கோயில் (கோப்புப் படம்).
Updated on
1 min read

கூடலூர்: நிறை புத்​தரிசி வழி​பாட்​டுக்​காக சபரிமலை​கோயில் நடை நாளை திறக்​கப்படுகிறது.

விவ​சா​யம் செழிப்​ப​தற்​காக ஒவ்​வொரு ஆண்​டும் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறை புத்​தரிசி வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இதன்​படி, இந்த ஆண்​டுக்​கான பூஜையை முன்னிட்டு நாளை மாலை கோயில் நடைதிறக்​கப்​படு​கிறது.

இந்த வழி​பாட்​டுக்​காக பாலக்​காடு, ஆரன்​முலா மற்​றும் செட்டி குளங்​க​ரா, தென்​காசி வயல்​களில் இருந்து அறு​வடை செய்​த நெல்லை பட்​டுத் துணி​யில் தனித்​தனிகட்​டு​களாக கட்​டப்​பட்டு அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்தில் நாளை ஊர்​வலமாக புறப்பட்டு பாரம்​பரிய கோயில்கள் வழியே பவனி வந்து ஆக.3-ம் தேதி சபரிமலைக்கு கொண்டு வரப்​படும்.

பின்னர் அவை கரு​வறை​ யில் சமர்ப்​பிக்​கப்​பட்டு வழி​பாடு நடத்​தி பக்​தர்​களுக்கு நெல்​மணி​கள் பிர​சாத​மாக வழங்​கப்பட்டு, அன்று இரவு நடை சாத்​தப்​படும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் (கோப்புப் படம்).
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in