பிள்ளையார்பட்டி கோயிலில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

செப்​.13-ம் தேதி தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கோயிலில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்
Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் பிள்​ளை​யார்​பட்டி கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இந்​தாண்​டுக்​கான சதுர்த்தி விழா கொடியேற்​றத்​துடன் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, சண்​டிகேசுவரர் சந்​நி​தியி​லிருந்து கொடி புறப்​பா​டாகி, கோயிலை வலம் வந்​தது. தொடர்ந்​து, கொடிமரம் அருகே உற்சவ விநாயகர், சண்​டிகேசுவரர், அங்​குசத்​தேவர் எழுந்​தருளினர். பின்​னர், கொடிமரத்​துக்​கும் மூஞ்​சூறு வாக​னம் வரையப்​பட்ட கொடிப்​படத்​துக்​கும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

விழா நாட்​களில் தின​மும் காலை​யில் வெள்​ளிக் கேடகத்​தி​லும், மாலை​யில் சிம்​மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்​ளிட்ட வாக​னங்​களி​லும் விநாயகர் எழுந்​தருளி வீதி உலாநடை​பெறும். செப்​.10-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்​யும் கஜமுக சூரசம்​ஹாரம், 13-ம் தேதி மாலை தேரோட்​டம் நடை​பெறும். அன்​றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் நடை​பெறும் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் மூல​வர் கற்பக விநாயகர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளிக்​கிறார்.

செப்​.14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, கோயில் திருக்​குளத்​தில் அங்​குசத்​தேவருக்கு தீர்த்​த​வாரி நடை​பெறும். பிற்​பகல் 2 மணிக்கு மூல​வருக்கு முக்​குறுணி மோதகம் படையலிடப்​படும். இரவு பஞ்​சமூர்த்தி சுவாமி புறப்​பாடு நிகழ்ச்​சி​யுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை, பரம்​பரை அறங்​காவலர்​கள் கோனாபட்டு ராம​சாமி செட்​டி​யார், அரிமளம் கண்​ணன் செட்​டி​யார் செய்து வரு​கின்​றனர்.

பிள்ளையார்பட்டி கோயிலில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்
“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in