கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். (உள்படம்) ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். (உள்படம்) ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்.

Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் ஆதி​கும்​பேஸ்​வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​று, ‘கும்​பேஸ்​வரா கும்​பேஸ்​வ​ரா’ என முழக்​கமிட்​டனர்.

கும்பகோணம் மகாமகம் தொடர்​புடைய 12 சைவ கோயில்​களில் முதன்​மை​யானது மங்​களாம்​பிகா உடனாய ஆதி​கும்​பேஸ்​வரர் கோயில். இக்​கோயி​லில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்​டு, 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக திருப்​பணி​கள் நடை​பெற்று வந்​தன.

பணிகள் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, கடந்த நவ.27-ம் தேதி யாக​சாலை பூஜைகளு​டன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. இந்​நிலை​யில், 8 கால யாக​சாலை பூஜைகளுக்​குப் பின், நேற்று அதி​காலை 5 மணிக்கு பரி​வார பூர்​ணாஹூ​தி​யுடன் கடம் புறப்​பா​டாகி, சிவச்​சா​ரி​யார்​கள் வேதமந்​திரங்​கள் முழங்க, சிவவாத்​தி​யங்​கள் இசைக்க, காலை 6.38 மணிக்கு மூல​வர், ராஜகோபுரம் உள்​ளிட்ட அனைத்து கோபுர கலசங்​களுக்​கும் புனிதநீர் ஊற்​றப்​பட்டு கும்பாபிஷேகம் விமரிசை​யாக நடை​பெற்​றது.

அப்​போது, ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கும்​பேஸ்​வ​ரா... கும்​பேஸ்​வ​ரா’ என விண்​ண​திர முழக்​கமிட்​டனர். பின்​னர் கலசங்​களுக்கு மகா தீபம் காட்​டப்​பட்​டது.

காஞ்சி பீடாதிபதி பங்கேற்பு: விழா​வில், காஞ்சி காமகோடி சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அமைச்​சர்​கள் சேகர்​பாபு, கோவி.செழியன், மந்த்​ராலய மடா​திபதி சுபுதேந்​திர தீர்த்த சுவாமிகள், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், எம்​எல்ஏ சாக்​கோட்டை அன்​பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறங்​காவலர் குழு தலை​வர் பாலசுப்​பிரமணி​யன், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் சிவக்​கு​மார், துணை ஆணை​யர் உமாதேவி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்​தி​கள் ரிஷப வாக​னத்​தில் வீதி​யுலா நடை​பெற்​றது. தஞ்​சாவூர் எஸ்​.பி ராஜா​ராம் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மற்​றும் ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

31 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: விழா​வில் பங்​கேற்ற அமைச்​சர் சேகர்​பாபு, செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழகம் முழு​வதும் இன்று (நேற்​று) 31 கோயில்​களில் கும்பாபிஷேகம் நடந்துள்​ளது. திமுக ஆட்சியில் இது​வரை 3,896 கும்பாபிஷேகம் நடை​பெற்​றுள்ள நிலை​யில் ஜனவரிக்​குள் 4 ஆயிரத்தை கடக்​கும்.

மேலும், 1,059 கோயில்​களுக்கு சொந்​த​மான ரூ.8,119 கோடி மதிப்​புள்ள 8,022.48 ஏக்​கர் நிலங்​கள் ஆக்​கிரமிப்​பில் இருந்து மீட்​கப்​பட்​டுள்​ளன. சுவாமி மலை கோயி​லில் அமைக்​கப்​பட்டு வரும் மின்​தூக்கி பொங்​கல் பண்​டிகைக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும்” என்​றார்.

<div class="paragraphs"><p>கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். (உள்படம்) ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்.</p></div>
“எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிடுவது வேடிக்கை” - நயினார் நாகேந்திரன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in