சபரிமலையில் குருதி பூஜையுடன் மகரஜோதி தொடர்பான அனைத்து வழிபாடும் நிறைவு

இன்று கோயில் நடை சாத்தப்படுகிறது
சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.

சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.

Updated on
1 min read

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பக்​தர்​களுக்​கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்​ததை தொடர்ந்து பக்​தர்​கள் அனை​வரும் வெளி​யேற்​றப்​பட்​டு, காளி மற்​றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்​யேக குருதி பூஜை நடை​பெற்​றது. இன்று கோயில் நடை சாத்​தப்​படுகிறது.

சபரிமலை ஐயப்​பன் கோயில் மகரஜோதி வழி​பாட்​டுக்​காக கடந்த 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. தொடர் வழி​பாடு​களுக்கு பிறகு, கடந்த 14-ம் தேதி ஐயப்​பனுக்கு பாரம்​பரிய நகைகள் அணிவிக்​கப்​பட்​டு, சிறப்பு வழி​பாடு நடை​பெற்​றது. பின்​னர், பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

திரு​விழா​வின் உச்ச நிகழ்​வான மகரஜோதி தரிசனம் நிறை வடைந்​த​தால், அது தொடர்​பான சடங்​கு​கள் அடுத்​தடுத்து நடை​பெற்று வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, மணி மண்டப வழி​பாடு, படிபூஜை, ஐயப்பனை வேட்​டைக்கு அழைத்​துச் செல்​லுதல் உள்​ளிட்ட பல்​வேறு சம்​பிர​தாய வழி​பாடு​கள் நடந்​தன. இதன் தொடர்ச்​சி​யாக, ஐயப்​பன் சரங்​குத்​தி​யில் எழுந்​தருளல் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதுகுறித்து தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறும்போது, ‘ஐயப்​பனின் பரி​வார தெய்​வங்​கள் சரங்​குத்​தி​யில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களை முறைப்​படுத்​தி, சந்​நி​திக்கு அனுப்​புவ​தாக ஐதீகம்.

தற்​போது விழா நிறைவடைந்​த​தால், அந்த பூதகணங்​களை சிறப்​பிக்​கும் வகை​யில் அவர்​களை மீண்​டும் சந்​நி​திக்கு ஐயப்​பன் அழைத்து வரு​வதற்​கான ஊர்​வலம்​தான் இது.

திரும்பி வரும்​போது இசைக்​கருவி​கள், பட்​டாசுகள் தவிர்க்​கப்​படும்’ என்​றனர். தரிசன நிறைவு நாளான நேற்று அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டது. கணபதி ஹோமம், உச்​சபூஜை உள்​ளிட்​டவை நடை​பெற்​றன.

இரவு 9 மணி வரை பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்​னர், சந்​நி​தானம், மாளி​கைப் புரத்​தம்​மன், மணிமண்​டபம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் இருந்த பக்​தர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்​து, பந்​தள​ராஜ வம்​சத்​தினர், தந்​திரி, மேல்​ சாந்​தி​கள், வழி​பாட்டு ஊழியர்​கள் மட்​டுமே பங்​கேற்ற குரு​தி பூஜை நடை​பெற்​றது. இதில் விழாவை நிறைவு செய்​யும் வகை​யில், காளி மற்​றும் வன தேவதைகளுக்​கான சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. புனிதநீர் தெளிக்​கப்​பட்டு உணவு​கள் படையலிடப்​பட்​டன.

இன்று (ஜன.20) ராஜ பிர​தி​நி​தி​யின் பிரத்​யேக தரிசனத்​துக்​குப் பிறகு காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்​தப்​படுகிறது.சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.

<div class="paragraphs"><p>சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.</p></div>
101 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாதது ஏன்? - கனிமொழி விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in