திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு: தருமபுரம் ஆதீனகர்த்தர் தகவல்

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு: தருமபுரம் ஆதீனகர்த்தர் தகவல்
Updated on
1 min read

காரைக்கால்: திருநள்​ளாறில் ஜோதிடர்கள் மாநாடு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்​ள​தாக தரு​மபுரம் ஆதீன கர்த்​தர் தெரி​வித்​துள்​ளார். காரைக்​கால் மாவட்​டம் திருநள்​ளாறில் உள்ள புகழ்​பெற்ற தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் மார்ச் 6-ம் தேதி சனிப்​பெயர்ச்சி விழா நடை​பெற உள்​ளது.

இதற்​கான பூர்​வாங்க பூஜைகள் நேற்று முன்​தினம் தொடங்​கி, பிப்​.28-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இவற்​றில் பங்​கேற்​ப​தற்​காக​வும், பூஜை ஏற்​பாடு​களை மேற்​கொள்​வதற்​காக​வும் தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகள் திருநள்​ளாறில் உள்ள ஆதீன கிளை மடத்​தில் தங்​கி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: பிப்​.20-ம் தேதி முதல் 10 நாட்​கள் 6 கிரகங்​கள் ஒரே கட்​டத்​தில் (ராசி​யில்) கூடி​யிருக்​கின்​றன. இதனால், பாதிப்​பு​கள் ஏற்​ப​டா​மல் இருக்க, சப்த நதி​களில் இருந்து தீர்த்​தங்​கள் கொண்​டு​வரப்​பட்டு பூஜிக்​கப்​பட்​டு, அது திருநள்​ளாறு நளன் தீர்த்​தத்​தில் சேர்ப்​பிக்​கப்​பட்​டது.

மேலும், ஓது​வார்​களைக் கொண்டு 2 நாட்​கள் தொடர்ச்​சி​யாக நவக்​கிரகங்​களுக்கு கோளறு பதி​கம் பாராயணம் செய்ய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. மார்ச் 6-ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிப்​பெயர்ச்சி நடை​பெறுகிறது.

இதையொட்​டி, நளன் தீர்த்​தத்​தில் புனித நீராடு​வோர் ஆடைகளை கழற்றி போட்​டு​விட்​டுச் செல்​கின்​றனர். இது பாவச் செயல். நளன் தீர்த்​தத்​தில் புனித நீராடல் மட்​டுமே செய்ய வேண்​டும். இங்கு கொடுக்​கப்​படும் பிர​சாதத்தை வீட்​டுக்கு எடுத்​துச் செல்​வது​தான் சிறப்​பு.

கிரக நிலைகள் குறித்து ஆய்வு செய்​வதற்​காக மார்ச் 1 முதல் 4 நாட்​கள் மாநாடு நடை​பெற உள்​ளது. மாநாட்​டில் பிரபல ஜோதிடர்கள் பங்​கேற்​கின்​றனர். ஆன்​மிகம், இறைவழி​பாடு, சமயத்தை மக்​கள் மத்​தி​யில் கொண்டு சேர்ப்​ப​தில் ஜோதிடர்களின் பங்​கு, அரசு மூல​மாக செய்​யும் உதவி​கள் போன்ற அம்​சங்​கள் மாநாட்​டில் இடம்​பெறும்.

தரு​மபுரத்​தில் ஆதீனத்​தின் சார்​பில் இலவச மருத்​து​வ​மனை கட்​டப்​படு​கிறது. மேலும் கல்​விப் பணி உள்​ளிட்ட பல்​வேறு சமூக தொண்​டு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. தமிழக அரசு இதற்கு ஒத்​துழைப்பு அளித்து வரு​கிறது. அதே​போல், புதுவை அரசும் ஒத்​துழைப்பு அளித்​தால், இங்​கும் பல்​வேறு சமூகப் பணி​களைச் செய்ய முடி​யும்.

திருநள்​ளாறில் உள்ள ஆதீன மடத்​தில் சனிக்​கிழமைதோறும் அன்​ன​தானம் அளிக்​கப்​படு​கிறது. இதை அனைத்து நாட்​களி​லும் அளிக்க ஏற்​பாடு செய்​யப்​படு​கிறது. தரு​மபுரத்​தில் 3 வேளை​யும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு இலவச​மாக​வும், மற்​றவர்​களுக்கு தலா ரூ.10-க்​கும் மலிவு விலை​யில் உணவு வழங்​கப்​படு​கிறது. அத்​திட்​டத்தை இங்​கும் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு: தருமபுரம் ஆதீனகர்த்தர் தகவல்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in