வார விடுமுறை நாட்களையொட்டி பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

Updated on
1 min read

பழநி: ​வார விடு​முறையையொட்டி பழநி முரு​கன் கோயி​லில் நேற்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி மலைக் கோயி​லில் வார விடு​முறையையொட்டி நேற்று அதி​காலை முதலே வெளி மாவட்​டம், வெளி மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் மலைக்​கோ​யிலுக்​குச் செல்​லும் பக்​தர்​கள் குட​முழுக்கு நினை​வரங்​கம் வழி​யாக​வும், கீழே இறங்​கும் பக்​தர்​கள் படிப்​பாதை வழி​யாக​வும் அனு​ம​திக்​கப்​பட்​டனர். பொது மற்​றும் கட்டண தரிசன வரிசை​யில் 3 மணி நேரம் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

காவடி எடுத்​தும், அலகு குத்தி வந்​தும் பக்​தர்​கள் நேர்த்​திக்​கடன் செலுத்​தினர். அன்​ன​தானம் வழங்​கும் இடத்​தி​லும் பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர். மேலும், ரோப் கார் மற்​றும் வின்ச் ரயி​லில் 2 மணி நேரம் வரிசை​யில் காத்​திருந்து மலைக்​கோ​யிலுக்​குச் சென்​றனர்.

முடி காணிக்கை மண்​டபத்​தி​லும் வரிசை​யில் காத்​திருந்து பக்​தர்​கள் முடி காணிக்கை செலுத்​தினர். இரவில் தங்​கரதத்​தில் எழுந்​தருளிய சின்​னக்​கு​மார சுவாமியை ஏராள​மானோர் தரிசனம் செய்​தனர்.

<div class="paragraphs"><p>பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள். </p></div>
“ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரங்களே ஆகி இருந்தாலும்...” - கோவை சிறுமி படுகொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in