வைகாசி சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

வை​காசி சர்வ அமா​வாசையையொட்டி ஆயிரக்​கணக்​கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடலில் புனித நீராடினர்.

வை​காசி சர்வ அமா​வாசையையொட்டி ஆயிரக்​கணக்​கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடலில் புனித நீராடினர்.

Updated on
1 min read

ராமேசுவரம்: வை​காசி சர்வ அமா​வாசையையொட்டி ஆயிரக்​கணக்​கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் தங்​களது முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து புனித நீராடினர்.

சூரியனும், சந்​திரனும் சேரும் அமா​வாசையன்று முன்​னோருக்கு பசி​யும், தாக​மும் அதி​க​மாக ஏற்​படும் என்​றும் அன்​றைய தினத்​தில் தர்ப்​பணம் செய்​வதன் மூலம், உணவும், நீரும் கிடைக்​கும் என்​பது ஐதீகம். இந்த ஐதீகத்​தின்​படி, வைகாசி சர்வ அமா​வாசையையொட்டி கடந்த சனிக்​கிழமை நள்​ளிர​விலிருந்தே தமிழகம் மட்​டுமின்​றி கேரளம், ஆந்​தி​ரா, தெலங்​கானா மற்​றும் கர்​நாட​கா​விலிருந்​தும் பக்​தர்​கள் ராமேசுவரம் வரத்​தொடங்​கினர். ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலையே ராம​நாதசு​வாமி கோயி​லின் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்றன.

தொடர்ந்​து, அக்னி தீர்த்​தக்​கரை​யில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தங்​கள் முன்​னோருக்கு சிறப்பு பூஜைகள் செய்​து, கடலில் நீராடிய பின் ராம​நாதசு​வாமி கோயில் வளாகத்​தில் உள்ள 22 புனித தீர்த்​தக் கிணறுகளி​லும் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து புனித நீராடினர். அதைத் தொடர்ந்​து, சுவாமி தரிசனம் செய்​தனர். பக்​தர்​கள் கூட்​டம் காரண​மாக ராமேசுவரத்​தில் பல்​வேறு பகு​தி​களில் வாகன நெரிசல் ஏற்​பட்​டது.

இதேபோல் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் தேவிப்​பட்​டினம், சேதுக்​கரை, மாரியூர் கடற்​கரைகளி​லும் அமாவாசையையொட்டி பக்​தர்​கள் கடலில் புனித நீராடி, தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர்.

<div class="paragraphs"><p>வை​காசி சர்வ அமா​வாசையையொட்டி ஆயிரக்​கணக்​கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடலில் புனித நீராடினர்.</p></div>
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in