மதுரை சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்வு: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

தேனூர் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய  சுந்தரராஜ பெருமாள்.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்.

Updated on
1 min read

மதுரை: கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.

அதை தொடர்ந்து கருட வாக​னத்​தில் புறப்​பட்​டு, பல்​வேறு மண்​டகப்​படிகளில் பிரசன்​ன​மாகி வண்​டியூர் வைகை ஆற்​றில் உள்ள தேனூர் மண்​டபத்​துக்கு பிற்​பகல் 1.15 மணி​யள​வில் எழுந்​தருளி​னார். அங்கு திரு​மஞ்​சன​மாகி மாலை 3.45 மணி​யள​வில் கருட வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். அப்​போது தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன. பின்​னர் மண்​டகப்​படி முன்பு மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்​கும் நிகழ்​வுக்​காக, கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் ஏற்​பாட்​டில் புதி​தாக கான்​கிரீட் தொட்டி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

அப்​போது மண்​டூக​மாக (தவளை​யாக) மாறிய முனிவரை நாரைகள் கொத்தி தின்று விடா​மல் சுந்​தர​ராஜபெரு​மாள் காப்​பாற்​றும் திரு​விளை​யாடல் தத்​ரூப​மாக நிகழ்த்தி காட்​டப்​பட்​டது. அதன் கரை​யில் மண்​டூக முனிவர் சிலை​யும், அங்கு உயிருடன் நாரை​யும் கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தன. மாலை 4.13 மணி​யள​வில் சுந்​தர​ராஜ பெரு​மாள் மண்​டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்​தார். அப்​போது கட்​டி​யிருந்த நாரை அவிழ்த்து விடப்​பட்​டது.

அந்த நாரை தென்​மேற்​குத் திசை நோக்கி பறந்து வைகை ஆற்று தண்​ணீரை தொட்​டுச் சென்​ற​தால், விவ​சா​யம் செழிக்​கும் என்று பக்​தர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். பின்​னர், சுந்​தர​ராஜ பெரு​மாள் மாலை 4.33 மணி​யள​வில் மண்​டகப்​படியை 3 முறை சுற்றி வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

அப்​போது உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேனூர் மண்​டபத்​தைச் சேர்ந்த 7 கரைக்​காரர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பி்ல் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. மாலை 4.52 மணிக்கு மண்​டகப்​படியி​லிருந்து புறப்​பட்டு அனு​மார்​பட்டி ஆஞ்​சநேயர் கோயிலுக்குச் சென்​றார். அங்கு அங்​கப்​பிரதட்​சணம் நடை​பெற்​றது. பின்​னர் வழிநெடு​கிலும் உள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளியபடி ராம​ராயர் மண்​டபம் சென்​றார். அங்கு விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெற்​றது.

இன்று ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து பிற்​பகல் 2.30 மணி​யள​வில் அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார். அப்​போது வைகைக் கரை​யின் அக்​கரை​யில் சிம்​மக்​கல் திரு​மலை​ராயர் படித்​துறை​யில் அழகரின் சடாரிக்கு பூஜை நடை​பெறுகிறது. மே 4-ல் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​திலிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார்.

கருப்​பண​சாமி கோயில், தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மலைக்கு திரும்​பு​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் கோயிலை அடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய  சுந்தரராஜ பெருமாள்.</p></div>
மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் சுருட்டிய சிஎஸ்கே | ஐபிஎல் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in