மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஏப்.28-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடியில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருள நடைபெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடியில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருள நடைபெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.

Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சித்​திரைத் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான திருக்​கல்​யாணம் ஏப்​.28-ம் தேதி நடை​பெறுகிறது. மதுரை​ சித்​திரைத் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. ஏப்​.30-ம் தேதி வரை நடக்கிறது.

முதல் நாளான நேற்று கொடியேற்​றத்​தையொட்டி சுவாமி சந்​நிதி முன்​புள்ள கம்​பத்​தடி மண்​டபம் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது. அப்​போது, மீனாட்சி அம்​மன், பிரி​யா​விடை சுந்​தரேசுவரர் தனித்​தனி​யாக வெள்ளி சிம்​மாசனத்​தில் காலை 10.30 மணி​யள​வில் எழுந்​தருளினர். அங்கு யாக​சாலை அமைத்து வேத மந்​திரங்​கள் முழங்க பூஜைகள் நடை​பெற்​றன.

பின்​னர், காலை 10.41 மணி​யள​வில் தங்​கக் கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது. கொடிமரத்​துக்​குச் சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனைகள் நடந்​தன. கொடிமரத்​தின் மேலிருந்து மலர்​கள் தூவப்​பட்​டன. பின்​னர், தீப, தூப ஆராதனை நடை​பெற்​றது நண்பகல் 12 மணி​யள​வில் கொடி மரம் முன்​பிருந்து சுவாமி, அம்​மன் புறப்​பட்டு, சுவாமி சந்​நிதி 2-ம் பிர​காரத்​தில் 3 முறை வலம் வந்து கோயிலுக்​குள் உள்ள மண்​டகப்​படி​யில் எழுந்​தருளினர்.

இவ்​விழா​வில் ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், கோயில் இணை ஆணை​யர் நா.சுரேஷ் மற்​றும் அறங்​காவலர்​கள் பங்​கேற்​றனர். நேற்​றிரவு கற்பக விருட்ச வாக​னத்​தில் பிரி​யா​விடை சுந்​தரேசுவரர், சிம்ம வாக​னத்​தில் மீனாட்சி அம்​மன் மாசி வீதி​களில் எழுந்​தருளினர்.

அப்​போது, குழந்​தைகள், சிறு​வர்​கள், சிறுமிகள் மீனாட்சி அம்​மன் வேட​மிட்டு வரவேற்​றனர். வழிநெடு​கிலும் பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். தின​மும் காலை, இரவு இரு வேளை​களும் பல்​வேறு வாக​னங்​களில் மாசி வீதி​களில் சுவாமி, அம்​மன் எழுந்​தருளுகின்​றனர்.

திரு​விழா​வின் 8-ம் நாள் (ஏப்​.26) இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்​டாபிஷேகம் நடைபெறும். அன்றி​லிருந்து ஆவணி மாதம் வரை 4 மாதங்​கள் மதுரை​யில் மீனாட்சி அம்​மனின் ஆட்சி நடை​பெறு​வ​தாக ஐதீகம். ஒன்​ப​தாம் நாள் (ஏப்​.27) திக்கு விஜ​யம், 10-ம் நாள் (ஏப்​.28) திருக்​கல்யாணம் நடை​பெறும்.

11-ம் நாள் தேரோட்​டமும் 12-ம் நாள் (ஏப்​.30) தீர்த்​த​வாரியும் ​நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்​பாடு​களை அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், இணை ஆணை​யர் நா.சுரேஷ் தலைமையில் நடக்கிறது.

<div class="paragraphs"><p>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடியில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருள நடைபெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.</p></div>
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு: 23-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in