

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, சித்தரை மாதத்தில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி நிறைவு பெற்ற பிறகு, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்ட பத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன. உண்டியல் காணிக்கையாக ரூ.2,16,04,221 ரொக்கம், 165 கிராம் தங்கம், 2.213 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.