Published : 22 Jan 2023 04:25 AM
Last Updated : 22 Jan 2023 04:25 AM

பழநி கும்பாபிஷேக விழா: ஜன.26 வரை மூலவர் தரிசனம் கிடையாது - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

பழநி: மூலவர் தரிசனம் கிடையாது; பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜன.27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை (ஜன.23) மட்டும் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தொடர்ந்து, நடைபெறும் முதல் கால யாக சாலை பூஜையின்போது சுவாமியை கலசத்தில் ஆவாஹணம் செய்யப்படும். அதனால் அன்றைய தினம் மாலை 3 மணி முதல் ஜன.26-ம் தேதி வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய முடியாது.

அதே சமயம் யாக சாலையில் எழுந்தருளும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜன.27-ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்ததும் வழக்கம்போல் பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். ஜன.23 முதல் ஜன.27-ம் தேதி வரை கால பூஜை கட்டளைகள், தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x