Published : 07 Dec 2022 06:40 AM
Last Updated : 07 Dec 2022 06:40 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்விழாவையொட்டி இன்றுகோயில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்திலும், பலி பீடத்திலும் மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை விஷ்ணு கார்த்திகை என்று அழைக்கின்றனர். இரவு 8 மணி வரை தீபம் ஏற்றி வழிபட இருப்பதால், கோயிலில் இன்று மாலை நடைபெற உள்ள சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், பவுர்ணமியையொட்டி நாளை (8-ம் தேதி)இரவு திருமலையில் கருட சேவை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x