Published : 19 Nov 2022 04:50 AM
Last Updated : 19 Nov 2022 04:50 AM

ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர்மண்டலங்களில், தலா 10 பேர் என 200 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

செலவை அரசே ஏற்கும்: பயணத்துக்கான செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 - 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அதே அலுவலகத்துக்கு டிச.15-க்குள் அனுப்பவேண்டும். மண்டல இணை ஆணையர்கள்பரிந்துரைக்கும் நபர்கள் பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x