

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பனின் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் லட்சோப லட்ச பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, அய்யப்பனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு ஆலயம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
கோயிலின் புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். வரும் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர் கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் வழக்கம் போலவே பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு கடந்த சில ஆண்டுகளாக கூட்ட நெரிசலை தவிர்க்க உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை கேரள போலீசாரின் கிராவுட் கன்ட்ரோலிங் உத்தி எனவும் சொல்லலாம்.
சபரிமலை கோயில் அய்யப்ப சாமி தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? - இதோ வழிமுறைகள்