Published : 20 Aug 2022 04:49 AM
Last Updated : 20 Aug 2022 04:49 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3 ஆயிரம் பக்தர்களுக்கு விரைவில் அன்னதானம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம் அருகே உள்ள அன்னதான கூடத்தில் தினசரி 300 பக்தர்களுக்கு முற்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து கோயில் அதிகாரிஒருவர் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். அன்னதான கூடத்தில், ஒரே நேரத்தில் 160 பேர் அமர்ந்து சாப்பிடலாம். தினசரி 20 பந்திகள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக நவீன சமையலறை அமைக்கப்படுகிறது.

அன்னதானம் வழங்கும் பணியில் 2 குழுக்கள் செயல்படும். காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு குழுவும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு குழுவும் செயல்படும். பக்தர்கள் அன்னதான கூடத்துக்கு நேரடியாக சென்று உணவு அருந்தலாம்.

டோக்கன் வழங்கும் முறையால் குழப்பம் ஏற்படுகிறது என ‘இந்துதமிழ் திசை' நாளிதழில் சுட்டிகாட்டியதன் எதிரொலியாக, 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் திட்டம் தொடங்கும்போது, டோக்கன் வழங்கும் முறை இருக்காது. இத்திட்டம் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x