Published : 29 Jul 2022 02:56 AM
Last Updated : 29 Jul 2022 02:56 AM

அத்தி வரதரை நின்ற கோலத்தில் மாற்றும் பணிகளுக்காக ஜூலை 31-ம் தேதி மட்டும் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது: காஞ்சி ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

29-ம் நாளில் இளம் சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர்

கே.சுந்தரராமன்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |


அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 29-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.


ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளுக்காக, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அத்தி வரதரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணியில் இருந்து எப்போதும் போல் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து மீண்டும் அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதேபோல் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆடி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு மேல் அத்தி வரதரை தரிசிக்க அனுமதி கிடையாது.

ஏற்கெனவே 2 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள், 16 காவல் கண்காணிப்பாளர்கள், 5,100 காவலர்கள் உள்ளனர். அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் நாட்களில் மேலும் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட உள்ளனர். வரிசையில் வரும் பக்தர்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வரிசையில் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x