Last Updated : 05 Jun, 2014 04:05 PM

 

Published : 05 Jun 2014 04:05 PM
Last Updated : 05 Jun 2014 04:05 PM

கர்மமே கடவுள்

ஹவே ஹாவ் (Hoa Hao) வியட்நாமில் பின்பற்றப்படும் ஒரு மிகப் பெரிய மதமாகும். ஹங்சூயஸ் (Hunh Ph S) இம்மதத்தைத் தோன்றுவித்தவர் ஆவார். 1919-ல் வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள சாவ் டாக் மாகாணத்தில், ஹவே ஹாவ் கிராமத்தில் ஹாங்சூயஸ் பிறந்தார். இவர் புத்த சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். தனது 15-ம் வயதில் ஹாங்சூயஸ் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயின் பாதிப்பு அவரது 21-ம் வயது வரை நீடித்தது. இதனால் இவரது கல்வியும் பாதிக்கப்பட்டது.

இந்த நோய் தந்த தனிமை அவரது மனத்தை ஆழமாகப் பாதித்தது. ஆன்மிகம் குறித்த தேடல் அவருக்குள் வேரூன்றத் தொடங்கியது. 1939-ம் ஆண்டு அவர் புனிதப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணங்களின் மூலம் அவர் முக்தி நிலையை அடைந்து, 1939-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி ஹவே ஹாவ் என்னும் புதிய மதத்தைத் தோற்றுவித்தார். ஹாங்சூயஸ் தனது புனிதத் தன்மையின் பல அரிய கருத்துகளை முன்வைத்தார். மூலம் வெறும் பச்சை இலைகளையும் துத்தமான தண்ணீரையும் பயன்படுத்தித் தீராத நோய்கள் பலவற்றையும் போக்கினார். இவர் பிறந்த ஊரின் பெயரே இந்த மதத்திற்கும் வழங்கப்படுகிறது. மேலும் அவர் பிறந்த இடம் புனிதத் தலமாகவும் வழிபடப்பட்டு வருகிறது.

ஹவே ஹாவ் மதம் மக்கள் மத்தியில் வியட்நாமில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இன்று இந்த மதத்தை ஐம்பது லட்சம் பேர் பின்பற்றுகிறார்கள். இந்த மதத்தின் முக்கியமான குறிக்கோள்களுள் ஒன்று புத்த மதத்தின் கருத்துகளை எளிய மக்களுக்கு விளக்குவதுதான். அதனால் இந்த மதத்தை ‘ஹவே ஹாவ் பெளத்தம்’ எனவும் அழைக்கிறார்கள்.

கர்ம வினையே கடவுளை அடைவதற்கான வழி என்பதையே இந்த மதம் போதிக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x