Published : 17 Dec 2015 03:08 PM
Last Updated : 17 Dec 2015 03:08 PM

வார ராசிபலன் 17-12-2015 முதல் 23-12-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் வலுத்திருக்கிறார். சூரியன், குரு, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். பணப்புழக்கம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தெய்வப்பணிகள் நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் பாராட்டுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. பயணத்தால் சங்கடம் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 20-ம் தேதி முதல் குரு 12-ம் இடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். இளைய சகோதர, சகோதரிகளால் சங்கடம் உண்டாகும். கைப்பொருள் காணாமல் போகும்; கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 18, 20, 21.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: செவ்வாய், ராகுவுக்குப் பிரீதியாக திருமுருகனையும், துர்கையம்மனையும் வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருப்பது விசேஷம். புதன், சுக்கிரன், ராகு சாதகமாக உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். செயல்வேகம் கூடும். பல வழிகளில் வருவாய் கிடைக்கும். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள்.

வாழ்க்கை வசதிகள் பெருகும். வியாபாரம் லாபம் தரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். மக்கள் நலனில் அக்கறை தேவை. கடுமையாக உழைக்க வேண்டி வரும். 20-ம் தேதி முதல் குரு 11-ம் இடம் மாறுவதால் ஆதாயம் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரம் திருப்தி தரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். பிள்ளைகள் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 18, 20, 21, 23.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி குரு 9-ல் பலம் பெற்றிருக்கிறார். செவ்வாய், சுக்கிரன், ராகுவின் சஞ்சாரம் அனுகூலமாக இருக்கிறது. சூரியனின் வீட்டில் குருவும், குருவின் வீட்டில் சூரியனும் இடம் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். இதனால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சாதுக்கள், மகான்களின் சந்திப்பு நிகழும். புனித யாத்திரை செல்வீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும்.

பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் அனுகூலமும் உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களது எண்ணம் நிறைவேறும். 20-ம் தேதி முதல் குரு 10-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிள்ளைகளாலும் உடன்பிறந்தவர்களாலும் சில பிரச்சினைகள் சூழும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். நல்லவர்களின் தொடர்பை வலுப்படுததிக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 18, 20, 21, 23.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் உலவுவது விசேஷம். சுக்கிரன் 10-ல் இருந்தாலும் நலம் புரிவார். கேது 3-ல் உலவுவதும் சிறப்பு. பண வரவு சற்று அதிகரிக்கும். உழைப்பு வீண் போகாது. நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். கலைஞர்கள், மாதர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும்.

கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். தந்தை நலனில் கவனம் தேவை. 20-ம் தேதி முதல் குரு 9-ம் இடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்சினைகள் குறையும். பிள்ளைகள் நலம் சீராகும். பணம் கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்களுக்கு வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 18, 20, 21, 23.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன்.

எண்கள்: 6, 7, 8.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பு. சூரியன், புதன், குரு, சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். பணப் புழக்கம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். மாணவர்களது நிலை உயரும். பெண்களின் எண்ணம் ஈடேறும். முக்கியஸ்தர்கள் உதவி செய்வார்கள்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். தந்தையாலும், பிள்ளைகளாலும் அனுகூலம் ஏற்படும். அரசியல், நிர்வாகம், மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 20-ம் தேதி முதல் குரு 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். பணப் புழக்கம் குறையும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குறுக்கு வழிகளில் செல்லவேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 20, 21, 23.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 8.

பரிகாரம்: நாகேஸ்வரனை வழிபடவும். திருமுருகனை வழிபடுவது அவசியம்.



மீன ராசி வாசகர்களே

சூரியன், புதன், சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறமை உண்டாகும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்பாராத பொருட்களின் சேர்க்கை நிகழும். பிற மொழி, மத, இனக்காரர்களால் தொல்லைகள் சூழும். பயணத்தின்போது விழிப்புத் தேவை.

யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. 20-ம் தேதி முதல் குரு 7-ம் இடம் மாறுவதால் உடல் நலம் சீராகும். நல்லவர்களுடன் தொடர்பு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். பிரச்சினைகள் குறையும். ஆசைகள் ஒன்றிரண்டு நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 20, 21, 23.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை, வான் நீலம்.

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: விநாயகர், துர்க்கைம்மனை வழிபடுவது நல்லது. வேதம் படிப்பவர்களுக்கு உதவலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x