Last Updated : 24 Dec, 2020 09:54 PM

 

Published : 24 Dec 2020 09:54 PM
Last Updated : 24 Dec 2020 09:54 PM

சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசியுங்கள்! 

சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை நேரலையில் ஒளிபரப்பாகிறது. நாளைய தினம் 25ம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்தபடியே கண்குளிர தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ளது சிங்கபெருமாள் கோயில். சிங்க முகம் கொண்டு, அதேசமயம் கருணையுடன் அருள்பாலிக்கிறார் நரசிம்மர். இவரால்தான் இந்த ஊருக்கே சிங்கபெருமாள் கோயில் என அமைந்தது.

சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்த அற்புதமான திருத்தலம். பாடலாத்ரி நரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படும் நரசிம்மர் திருத்தலம், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

சிங்கப்பெருமாள் கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியினை நேரலையில் நாளை 25ம் தேதி இல்லத்தில் இருந்தபடியே தரிசிக்கலாம்.

பக்தர்கள் https://youtu.be/TLHF5l_Uo28 என்ற YouTube channel மூலம், 25.12.2020 அதிகாலை 3.30 மணிக்கு மேல் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து நரசிம்மரின் பேரருளைப் பெறலாம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வழிபாட்டினை நேரலையில் கண்டு பெருமாளின் அருளைப் பெறுங்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x