Last Updated : 12 Aug, 2020 08:50 PM

 

Published : 12 Aug 2020 08:50 PM
Last Updated : 12 Aug 2020 08:50 PM

கடனில்லா வாழ்வு தரும் தசாவதார காயத்ரி

மகாவிஷ்ணு வழிபாடு என்பது எப்போதும் எந்தக் காலகட்டத்திலும் வாழ்க்கைக்கு பக்கபலத்தைத் தருபவை. பக்கத்துணையாக இருப்பவை.

மகாவிஷ்ணுவை வணங்கினால், திருப்பதி ஏழுமலையானை வணங்கினால், திருமாலுக்கு உரிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால், சகல செல்வ கடாட்சங்களையும் தந்தருள்வார். வீட்டில் அமைதியைத் தந்து எப்போதும் நிம்மதியை அருளுவார் மகாவிஷ்ணு.

மகாவிஷ்ணு வழிபாட்டுக்கு ஒரு கை துளசி போதும். துளசி சார்த்தி இந்த ஸ்லோகங்களை, விஷ்ணு அவதார காயத்ரியைச் சொல்லுங்கள். குபேரனுக்கு அருளியது போல் நம் வாழ்விலும் ஒளியேற்றுவார். மங்கல காரியங்களை நடத்தித் தந்தருள்வார்.

மகாவிஷ்ணுவின் தசாவதார காயத்ரி இவை. பத்து அவதார தெய்வங்களையும் மனதார வணங்குங்கள். வளம் பெறுவீர்கள்.

ஓம் கச்சபேஸாய வித்மஹே
மஹா பலாய தீமஹி
தந்நோ கூர்ம ப்ரசோதயாத்
*****

ஓம் வாசுதேவாய வித்மஹே
ராதாப்ரியாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்
**************

ஓம் நரசிம்மாய வித்மஹே
வஜ்ர நகாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
**********

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா மீனாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
*************

ஓம் தனுர்தாராய வித்மஹே
வகர தம்ஸ்த்ராய தீமஹி
தந்நோ வராக ப்ரசோதயாத்
***********
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ நாராயணா ப்ரசோதயாத்
***********

ஓம் த்ரைலோக்ய மோகனாய வித்மஹே
ஆத்மராமாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
**********

ஓம் லட்சுமிநாதாய மோகனாய வித்மஹே
சக்ரதாராய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
***********

ஓம் விஷ்ணுதேவாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
********

ஓம் பூவராகாய வித்மஹே
ஹிரண்யகர்ப்பாய தீமஹி
தந்நோ க்ரோத ப்ரசோதயாத்
**********

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
**********

ஓம் நிலாயாய வித்மஹே
வெங்கடேசாய தீமஹி
தந்நோ ஹரி ப்ரசோதயாத்
********

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிரா பாஷாய தீமஹி
தந்நோ வெங்கடேச ப்ரசோதயாத்
***********

ஓம் நிரானாய வித்மஹே
நிரா பாஷாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாச ப்ரசோதயாத்
**********

மனமார்ந்த மகாவிஷ்ணு அவதார காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து, பிரார்த்தனை செய்யுங்கள். சகல ஐஸ்வரியங்களையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லை மற்றும் சிக்கல்களில் இருந்து மீளச் செய்து அருளுவார் ஏழுமலையான்.

வாழ்வில் நல்ல நல்ல ஏற்றமும் மாற்றமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x